சைனாடவுன் சாலையில் சிதறிக் கிடந்த முட்டைகள்…!!!

சைனாடவுன் சாலையில் சிதறிக் கிடந்த முட்டைகள்...!!!

சிங்கப்பூர்: சைனாடவுனில் உள்ள அப்பர் கிராஸ் தெருவில் ஒரு லாரியில் இருந்து நூற்றுக்கணக்கான முட்டைகள் சாலையில் விழுந்து சிதறிக்கிடந்தன.

இந்த சம்பவம் நேற்று நடந்ததாக ஒரு இணைய பயனர் ரெடிட் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் வீட்டிற்கு செல்லும் வழியில் இந்த சம்பவத்தைப் பார்த்ததாகக் கூறினார்.

முட்டைகள் சிதறிக் கிடப்பதைப் பற்றிய புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார்.

அந்த வழியாகச் சென்றவர்கள் இந்தக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகக் கூறினார்.

சாலையில் விழுந்த முட்டைகளை லாரி ஓட்டுநர் அவசரமாக அகற்ற முயற்சிப்பதாக ஒரு இணையவாசி கூறினார்.

இந்தப் பதிவைப் பார்த்த இணையவாசிகள் சிலர் முட்டை விலை உயர்வுக்கு இது போன்ற சில சம்பவங்களும் காரணமாக இருக்கலாம் என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளனர்.