குழந்தை பராமரிப்பு நிலையத்தின் மீது மோதிய வாகனம்…!!!4 குழந்தைகள் பலி..!!

குழந்தை பராமரிப்பு நிலையத்தின் மீது மோதிய வாகனம்...!!!4 குழந்தைகள் பலி..!!

அமெரிக்காவில் ஒரு குழந்தை பராமரிப்பு மையம் இருந்த கட்டிடத்தின் மீது வாகனம் மோதியதில் நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர்.

அவர்கள் அனைவரும் 4 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் அமெரிக்காவின் இலனோயில் உள்ள சாதாம் என்ற சிறிய நகரத்தில் நடந்தது.

YNOT After School Camp என்று அழைக்கப்படும் இந்த மையம், குழந்தைகளுக்கான வெளிப்புற நடவடிக்கைகளை வழங்குகிறது.

இச் சம்பவம் நடந்தபோது அவர்களில் மூன்று பேர் கட்டிடத்திற்கு வெளியேயும் ஒருவர் உள்ளேயும் இருந்தனர்.

வாகனத்தின் ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

அவர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

காயமடைந்தவர்களில் சிலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

பள்ளி முடிந்ததும் குழந்தைகள் அனுப்பப்படும் மையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.