விமானத்தில் குடிப்போதையில் மோசமாக நடந்து கொண்ட இந்திய நபர்!! சாங்கி விமான நிலையத்தில் கைது!!

விமானத்தில் குடிப்போதையில் மோசமாக நடந்து கொண்ட இந்திய நபர்!! சாங்கி விமான நிலையத்தில் கைது!!

விமானத்தில் குடிபோதையில் இருந்தது மற்றும் விமான பணியாளரை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக 42 வயதுடைய இந்திய நபர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி மாலை 6.55 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

அந்த நபரின் செயல் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

குடிபோதையில் இருந்ததாக நம்பப்படும் அந்த நபர் தமது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பயணியை இழுத்து முன்னால் இருந்த இருக்கையில் வலுக்கட்டாயமாக தள்ளியதாகவும்,மற்ற பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

விமான பணியாளர்கள் அந்த நபரை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர் என்றும் அவர் எதற்கும் ஒத்துழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆண் சிப்பந்தி ஒருவரின் கையைப் பிடித்து அவரை கொலை செய்யப் போவதாக கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

விமானம் கிளம்பிய இடத்திற்கே திரும்பிவிடும் என்று விமான பணியாளர்கள் கூறிய பின்னரே அந்த நபர் அமைதியாக இருந்தார்.

எந்த நிறுவனத்தை சேர்ந்த விமானம் என்பதும் அந்த விமானம் எங்கு இருந்து வந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

சாங்கி விமான நிலையம் வந்தடைந்தவுடன் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.