உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஏற்பட்ட விபத்தின் எதிரொலி!!
சமீபத்தில் ஏற்பட்ட விபத்திற்கு பிறகு உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சமீபத்தில் நடந்த விபத்து மே 24 ஆம் தேதி நேர்ந்தது.
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் புறப்பட்ட சிங்கப்பூர் கார் ஒன்று மலேசிய பேருந்து மீது மோதியதில் போக்குவரத்து விபத்து ஏற்பட்டது.முதற்கட்ட விசாரணையில் , இருவழி போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது தெரிய வந்தது.இது பாதுகாப்பு விதிமீறல் என்று ஆணையம் தெரிவித்தது.
இதன் காரணமாக இருவழி போக்குவரத்து அனுமதிக்கப்படுவதற்கு முன்பு போக்குவரத்து தடுப்பு கூம்புகள் வைக்கப்பட்டுள்ளன.
பாதையில் இருவழி போக்குவரத்து தொடங்குவதற்கு 15 முதல் 20 மீட்டர் தூரத்தில் அவை வைக்கப்பட்டன.
இதன் மூலம் வாகன ஓட்டிகள் தங்கள் பாதையில் வரவிருக்கும் மாற்றத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும்.
அதன் படி அவர்கள் தங்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு போதுமான நேரம் கிடைக்கும்.