மனைவியின் நிலைமையை கண்டு புகை பிடிக்கும் பழக்கத்தை விட்ட கணவர்..!!! 13/05/2025 / china, sgtamilan, worldnews மனைவியின் நிலைமையை கண்டு புகை பிடிக்கும் பழக்கத்தை விட்ட கணவர்..!!! சீனாவின் ஹெனான் நகரில் வசிக்கும் தம்பதியினருக்கு ஒரு அதிர்ச்சியூட்டும் சோகச் சம்பவம் நடந்துள்ளது.ஆம்.மருத்துவ பரிசோதனையில் மனைவிக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.மனைவிக்கு சமீபத்தில் மிகவும் கடுமையான இருமல் இருந்தது.அது மார்பு வலியை ஏற்படுத்தியது.அவர் ஒரு மருத்துவரை அணுகியபோது, அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அமெரிக்காவில் அதிகரிக்கும் தட்டம்மை நோயால் மூவர் உயிரிழப்பு...!!! புகைப்பிடிப்போரின் உறவினர்கள் இந்தப் பழக்கத்தால் பாதிக்கப்படலாம் என்று மருத்துவர் கூறினார்.புற்றுநோய் பல காரணங்களுக்காக ஏற்படலாம் என்றும் அவர் கூறினார்.அவரது கணவர் கிட்டத்தட்ட 45 வருடங்களாக புகைப்பழக்கம் உடையவர்.தனது மனைவிக்கு நேர்ந்த நிலையைக் கண்டு வேதனை அடைந்த அவர் இப்போது புகைபிடிக்கும் பழக்கத்தையே விட்டுவிட்டார். FOLLOW US ON MORE :Telegram id : https://t.me/sgnewsinfooFacebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwLInstagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==