கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான புதுவரவுகளை வரவேற்றுள்ள மண்டாய் வனவிலங்கு காப்பகம்!!

கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான புதுவரவுகளை வரவேற்றுள்ள மண்டாய் வனவிலங்கு காப்பகம்!!

மண்டாய் வனவிலங்கு சரணாலயம் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான புதுவரவுகளை வரவேற்றுள்ளது.

Bird paradise, இரவு safari, சிங்கப்பூர் வனவிலங்கு தோட்டம்,River wonders ஆகிய சுற்றுலாத்தலங்களில் ஒட்டு மொத்தமாக 998 விலங்குகள் பிறந்தன.

அவை 140 க்கும் அதிகமான விலங்கினங்களை சேர்ந்தவை ஆகும்.

அவற்றுள் 34 இனங்கள் அழிந்து வரும் இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மண்டாய் வனவிலங்கு சரணாலயம் விலங்கு இனப்பெருக்கத் திட்டங்களை வழிநடத்தியுள்ளது.

20க்கும் அதிகமான திட்டங்களில் அது அனைத்துலக விலங்குநல அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியது.

மனிதப் பராமரிப்பின்கீழ் ஆரோக்கியமான மரபணுக்களைப் பாதுகாக்க திட்டங்கள் முயல்கின்றன.