சிங்கப்பூரில் மே 16 முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கொண்டாடும் நிகழ்ச்சி...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் 60வது சுதந்திர ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சிங்கப்பூரை பசுமையான மற்றும் வளமான நாடாக மாற்றும் குறிக்கோளுடன், ‘லெட்ஸ் கோ கிரீன் எஸ்ஜி 2025’ இயக்கம் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது.
‘லெட்ஸ் கோ கிரீன் எஸ்ஜி’ இயக்கத்தை தலைவர் தர்மன் சண்முகரத்னம், மே 16 ஆம் தேதி சங்காட் தொடக்கப்பள்ளியில் திறந்து வைக்க உள்ளார்.
இந்த இயக்கமானது இவ்வருடம் 900க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுடன் அமைய உள்ளது. சிங்கப்பூரர்கள் பசுமையான, வளமான சிங்கப்பூரை நோக்கி ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க ஊக்குவிக்கும் வகையில் அமர்வுகள், பயிலரங்குகள், சுற்றுப்பயணங்கள், கண்காட்சிகள் என பல நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
கூடுதல் சிறப்பம்சமாக, நாட்டின் கடல்சார் நிலைத்தன்மையை வெளிப்படுத்த, சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையத்துடன் இணைந்து தெற்கு தீவுகளில் வழிகாட்டப்பட்ட படகுச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் நாட்டின் முதல் மிதக்கும் சூரிய மின் உற்பத்திப் பண்ணையின் சுற்றுப்பயணம் உட்பட பல்வேறு சமூக நடவடிக்கைகளில் பங்கேற்கலாம்.
நாட்டில் சுற்றுச்சூழல் மேலாண்மையை ஊக்குவிப்பதற்காக, 1,000க்கும் மேற்பட்ட பாலர் பள்ளிகளுக்கு தேசிய அளவிலான ‘கோ கிரீன் எஸ்ஜி’ இயக்கம் குறித்த கற்றல் ஏடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு இயக்கம் மே 16 முதல் ஜூன் 29 வரை நடைபெறும்.
பொதுமக்கள் இந்த இயக்கத்தில் நடைபெறும் நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ள மே 12 முதல் www.gogreen.gov.sg என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
FOLLOW US ON MORE :
Telegram id : https://t.me/sgnewsinfoo
Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL
Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==
